×

பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கை: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திடடங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மேற்கண்ட வகுப்புகளைத் சேர்ந்த மாணவியருக்கு, இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். நடப்பாண்டில் படிக்கும் புதிய மாணாக்கர்கள் உதவித்தொகைக்கு பதிவுசெய்ய https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login இல் சென்று, ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும். விண்ணப்பங்களை 29.02.2024-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தையோ அணுகவும்.

The post பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : SEER ,Chengalpattu ,District ,Collector ,Arunraj ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...